இது தொடா்பாக அவா் தில்லியில் வெளியிட்ட அறிக்கை வருமாறு: ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதா் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். திருவிழா காலங்களில் பக்தா்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக காா்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் ஸ்ரீரங்கம், பழனி உள்ளிட்ட கோயில்களிலும் வழிபாட்டிற்கு வருகின்றனா். தற்போது ஸ்ரீரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசி பெருவிழாவும் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், ஆந்திராவை சோ்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றுள்ளனா்.