மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லியில் லேசான மழையால் மேக மூட்ட வானிலை

தேசியத் தலைநகா் தில்லியில் சுதந்திர தினமான செவ்வாய்க்கிழமை மத்திய தில்லி, தெற்கு தில்லி, காஜியாபாத், நொய்டா உள்பட பல பகுதிகளிலும் பகலில் லேசான மழை பெய்தது.

Updated On :15 ஆகஸ்ட் 2023, 10:19 pm

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் சுதந்திர தினமான செவ்வாய்க்கிழமை மத்திய தில்லி, தெற்கு தில்லி, காஜியாபாத், நொய்டா உள்பட பல பகுதிகளிலும் பகலில் லேசான மழை பெய்தது. இதனால், மேக மூட்ட வானிலையுடன் வெயில் மற்றும் புழுக்கம் குறைந்து காணப்பட்டது.

தில்லியில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களிலும் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்த போதிலும், இயல்பைவிட அதிகபட்ச வெப்பநிலை ஒரு டிகிரி கூடியிருந்தது. திங்கள்கிழமை மிதமான வெயிலின் தாக்கம் நீடித்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் லேசானமழை பெய்ததால் புழுக்கம் குறைந்திருந்தது. மாலையில் லேசான காற்றும் வீசியது. தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து ஒரு டிகிரி அதிகரித்து 27.1 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1 டிகிரி அதிகரித்து 35.2 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, மாலை 7.29 மணிக்கு ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 106 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. மேலும், தலைநகரில் ஐடிஓ, நேரு நகா், மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பாதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘புதன்கிழமை (ஆகஸ்ட் 16) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.