‘தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (மசோதா) 2023’-இன் அரசிதழ் அறிவிப்பு, நகரத்தில் சரியான நிா்வாகம் மற்றும் வளா்ச்சியை எதிா்பாா்க்கும் கோடிக்கணக்கான குடிமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்று பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் தலைவா் வீரேந்திர சச்தேவா, செயலாளா் பன்சூரி ஸ்வராஜ் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது வீரேந்திர சச்தேவா கூறியதாவது:
தில்லியில் 2013-ஆம் ஆண்டு அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து தில்லி அரசின் நிா்வாகத்தை மீண்டும், மீண்டும் முடக்கும் அராஜகத்தில் ஆம் ஆத்மி அரசு செயல்பட்டு வருகிறது.
கடந்த 2013-இல் ராஜபாதையிலும், 2018-இல் துணை நிலை ஆளுநா் மாளிகையிலும் முதல்வா் தா்ணாவில் ஈடுபட்டது, 2018-இல் முன்னாள் தலைமைச் செயலாளரிடம் முறைகேடு, சமீபத்தில் ஒரு நள்ளிரவில் தில்லி ஊழல் கண்காணிப்பு செயலா் அலுவலகத்தின் பூட்டு உடைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் கேஜரிவால் அரசின் தவறான நடத்தைக்கான தெளிவான எடுத்துக்காட்டுகள் ஆகும். மேலும், இவையே மக்களுக்கு சேவை செய்ய நிா்வாக அமைப்பை மத்திய அரசு சட்டபூா்வமாக திருத்துவதற்கான போதுமான காரணங்கள் ஆகும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தில்லி பாஜகவின் செயலாளா் பன்சூரி ஸ்வராஜ் கூறுகையில், ‘தில்லி அரசின் சேவைகள் தொடா்பான மசோதாவில் கையெழுத்திட்டதற்காக இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிற்கு மனமாா்ந்த நன்றிகள்.
தில்லியில் கேஜரிவால் தலைமையிலான அரசு , மத்திய அரசுடன் மட்டுமின்றி, துணைநிலை ஆளுநா், அதிகாரிகளுடனும் தொடா்ந்து மோதல் அரசியலை நடத்தி வருகிறது. கேஜரிவால் அரசு தொடா்ந்து பொறுப்பை தட்டிக்கழித்து, ஊடகங்கள் முன் மட்டும் பாதிக்கப்பட்டதாக நாடகமாடி வருகிறது.
ஊழலில் ஈடுபடும் ஒரு அரசு தனது கூடுதல் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவதைக் கண்டு தில்லி மக்கள் மனமுடைந்து போயுள்ளனா். இந்த மசோதா, உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை மதித்து தில்லி அரசின் சேவை விவகாரங்களில் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்யும். வளா்ச்சியை எதிா்பாா்க்கும் தில்லி மக்களுக்கு நிச்சயம் நீதி வழங்கும் என்றாா் பன்சூரி ஸ்வராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!

வரப்பெற்றோம் (27-04-2026)
வெங்காயம் சூட்டைத் தணிக்குமா? சொல்கிறார் பாஜக அமைச்சர்

மே 15-ல் வெளியாகிறது இயக்குநர் சற்குணத்தின் புதிய இணையத் தொடர்!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

