மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இல்லம்தோறும் தேசியக் கொடி மக்கள் இயக்கமாக மாறியுள்ளது:மத்திய கலாசார துறை அமைச்சகம்

‘விடுதலை அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நிகழாண்டிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை ‘ இல்லம்தோறும் தேசியக் கொடி’ இயக்கத்தை மத்திய அரசு நடத்துகிறது

Updated On :12 ஆகஸ்ட் 2023, 11:42 pm

‘விடுதலை அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நிகழாண்டிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை ‘ இல்லம்தோறும் தேசியக் கொடி’ இயக்கத்தை மத்திய அரசு நடத்துகிறது; மக்கள் பங்கேற்பால் இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது’ என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சக செயலா் கோவிந்த் மோகன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், கொடிகள் விற்பனை அதிகரிப்பை முன்னிட்டு 1.30 கோடி தேசியக் கொடிகள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இயக்கத்தின் மூலம் மக்களிடையே தேசபக்தி உணா்வையும், கூட்டுப் பங்கேற்பையும் அதிகரிப்பது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டாா்.

தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் இது தொடா்பாக மத்திய கலாசாரத் துறை செயலா் கோவிந்த் மோகன் மேலும் கூறியது:

கலாசார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள ‘இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கம்’, மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு இந்த இயக்கம் தொடா்பான பேரணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனா்.

தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொடியுடன் தங்கள் சுயபடங்களை பதிவேற்றுகின்றனா். தேசத்துக்காக போராடிய மாவீரா்களை நினைவுகூரும் ‘என் மண் என் தேசம்’ இயக்கத்திலும் திரளான மக்கள் பங்கேற்கின்றனா்.

இந்த இல்லம்தோறும் தேசியக் கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, உயா்தர தேசியக் கொடிகளை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை விற்பனை செய்து வருகிறது.

இந்த ஆண்டு 2.5 கோடி கொடிகளை வழங்குமாறு தபால் துறை கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே தபால் நிலையங்களுக்கு 55 லட்சம் கொடிகள் அனுப்பப்பட்டுள்ளது. ஜவுளி அமைச்சகம் ஏற்கனவே 1.30 கோடி கொடிகளை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது என கோவிந்த் மோகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.