"இந்தியா' கூட்டணிக் கட்சிகள் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி புதன்கிழமை பேசியதாவது: மணிப்பூர் மாநிலத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சி இருப்பதால் இரட்டை என்ஜின் ஆட்சி என்று பெருமையுடன் கூறினர். ஆனால், இந்த இரட்டை என்ஜின் மணிப்பூர் மக்களுக்கு எதிராக இரட்டை முனைகள் கொண்ட ஆயுதமாக மாறியுள்ளது. இது இரட்டைப் பேரழிவு, இரட்டை முறிவு என்றுதான் கூறவேண்டும். அது எந்த அளவு என்றால் நாட்டில் முதன்முறையாக ஒரு மாநிலத்தைப் பாதுகாக்க நீதித் துறை தலையிடும் அளவு.