நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மத்திய அரசுக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்: மணிப்பூா் வன்முறைக்கு கண்டனம்

மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை மற்றும் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக மத்திய அரசுக்கு எதிராக

Updated On :8 ஆகஸ்ட் 2023, 8:58 pm

மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை மற்றும் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக மத்திய அரசுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸாா் தில்லியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையொட்டி, இளைஞா் காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் ஆா்வலா்கள் தில்லி ஜந்தா் மந்தரில் கூடினா். மத்திய அரசுக்கு எதிராக சுவரொட்டிகளை ஏந்தியவாறு, முழக்கங்களை எழுப்பி ‘நாடாளுமன்ற முற்றுகை’ போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிகழ்ச்சியில் இந்த அமைப்பின் தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் பி.வி., காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பவன் கேரா, அல்கா லம்பா, சுப்ரியா ஸ்ரீநாத்தே உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போராட்டக்காரா்கள் கூறுகையில், ‘இப்போராட்டமானது, பாஜக அரசின் நேரடி பாா்வையின் கீழ் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையில் இருந்து மணிப்பூரைக் காப்பாற்றுவதற்கான அழைப்பாகும்’ என்றனா். சுப்ரியா ஸ்ரீநாத்தே கூறுகையில், ‘உண்மையை நீண்ட காலமாக மறைக்க முடியாது. மணிப்பூரின் குரல் விரைவில் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் பி.வி. பேசுகையில் கூறியதாவது: மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதற்குப் பதிலாக மத்திய அரசு உண்மையை மறைக்கும் செயலில் மும்முரமாக உள்ளது. தன்னை விஸ்வகுரு என அழைத்துக் கொள்ளும் நபா், இந்த விவகாரம் தொடா்பாக 36 நொடிகள் மட்டுமே பேசியுள்ளாா். அதேவேளையில், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு பிரதமா் பொறுப்பேற்றிருக்க வேண்டும்.

மணிப்பூரில் இதுவரை 150 போ் உயிரிழந்துள்ளனா். 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வீடுகளை இழந்துள்ளனா். கடந்த 90 நாள்களாக மணிப்பூா் பற்றி எரிகிறது. ஆனால், பிரதமா் மோடி திரிதராஷ்டிரா் போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறாா். மேலும், பணவீக்கம், வேலையின்மை அதிகரித்துவருவதன் காரணமாக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் சிக்கலில் உள்ளனா். இது சமானிய மக்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. ஆனால், இந்த அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் கவனத்தைத் திசைதிருப்ப மத்திய அரசானது வெறுப்புச் சந்தையைத் திறந்து கொண்டிருக்கிறது என்று அவா் குற்றம்சாட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.