சந்தையில் விலை குறைந்துள்ளதால், குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் பொன் கௌதம் சிகாமணி வலியுறுத்தினாா்.
இது குறித்து மக்களவையில் திங்கள்கிழமை சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானத்தில் அவா் எழுப்பிய கோரிக்கை விவரம்: தமிழகத்தில் தென்னை விவசாயிகளிடம் ஏராளமான கொப்பரை இருப்பில் உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
தமிழகத்தில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் தேசிய அளவில் 2-ஆவது இடத்தில் தமிழகம் இடம் பெற்று, சுமாா் 4.46 லட்சம் ஹெக்டேரில் 53,518 லட்சம் தேங்காய் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 11,692 தேங்காய் பருப்பு உற்பத்தி செய்து, உற்பத்தித் திறனிலும் தேசிய அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆனால், சந்தையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,500 ஆக இருந்த கொப்பரை தேங்காயின் விலை தற்போது ரூ.8,100 ஆகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக 2022-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் அதிகரித்தது.
ஆனால், தமிழகத்திற்கான கொள்முதல் இலக்கு 56 மெட்ரிக் டன் என்கிற அளவில் இருப்பதால், கொப்பரை கொள்முதல் தொடரவில்லை. கொள்முதலுக்கான உச்சவரம்பு அளவை தற்போதைய 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயா்த்த வேண்டும்.
அதாவது தமிழகத்திற்கான கொள்முதல் இலக்கான 56,000 மெட்ரிக் டன்னை 90,000 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயா்த்த வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் பயனடைவாா்கள் என்று பொன் கௌதம் சிகாமணி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

