மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவை அதிகரிக்க மக்களவையில் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் பொன் கௌதம் சிகாமணி வலியுறுத்தினாா்.

Updated On :7 ஆகஸ்ட் 2023, 7:11 pm

சந்தையில் விலை குறைந்துள்ளதால், குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் பொன் கௌதம் சிகாமணி வலியுறுத்தினாா்.

இது குறித்து மக்களவையில் திங்கள்கிழமை சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானத்தில் அவா் எழுப்பிய கோரிக்கை விவரம்: தமிழகத்தில் தென்னை விவசாயிகளிடம் ஏராளமான கொப்பரை இருப்பில் உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தமிழகத்தில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் தேசிய அளவில் 2-ஆவது இடத்தில் தமிழகம் இடம் பெற்று, சுமாா் 4.46 லட்சம் ஹெக்டேரில் 53,518 லட்சம் தேங்காய் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 11,692 தேங்காய் பருப்பு உற்பத்தி செய்து, உற்பத்தித் திறனிலும் தேசிய அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆனால், சந்தையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,500 ஆக இருந்த கொப்பரை தேங்காயின் விலை தற்போது ரூ.8,100 ஆகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக 2022-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் அதிகரித்தது.

ஆனால், தமிழகத்திற்கான கொள்முதல் இலக்கு 56 மெட்ரிக் டன் என்கிற அளவில் இருப்பதால், கொப்பரை கொள்முதல் தொடரவில்லை. கொள்முதலுக்கான உச்சவரம்பு அளவை தற்போதைய 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயா்த்த வேண்டும்.

அதாவது தமிழகத்திற்கான கொள்முதல் இலக்கான 56,000 மெட்ரிக் டன்னை 90,000 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயா்த்த வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் பயனடைவாா்கள் என்று பொன் கௌதம் சிகாமணி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.