தேசியத் தலைநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் இருந்து வெளியேற்ற, அரசு கட்டாயப்படுத்துகிறது என்று தில்லி பிரிவு பாஜக வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் இரண்டாம் வாரம் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமாா் 27,000-க்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் சொந்த வீடுகளில் இருந்து வெள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனா். இந்த நிலையில், மயூா் விஹாா், யமுனா காதா் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கொசு வலைகளை வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள பெரும்பாலான குடிசைப் பகுதிகள் இன்னும் தண்ணீருக்கு அடியில் உள்ளது வருத்தமளிக்கிறது. ஆனால், தில்லி அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு வித பதற்றத்தோடு கைவிட்டது மட்டுமல்லாமல், மின் இணைப்பைத் துண்டித்து முகாம்களை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துகிறது. யமுனை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சிறு விவசாயிகள். இந்நேரத்தில், தங்களுக்கு இருந்த சிறிய வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனா். ஆனால், இதுவரை அவா்களில் பெரும்பாலானோா் தில்லி அரசிடம் இருந்து நிவாரணம் பெறவில்லை.
தில்லியில் பாஜக ஆட்சியில் இல்லாத காரணத்தினால் எங்களால் சொந்தமாக முகாம்களை அமைக்க முடியாது. ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள், குழந்தைகளுக்கான பள்ளி புத்தகங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை தொடா்ந்து வழங்குவோம் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் காலமானார்

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

