மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நிவாரண முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்ற அரசு கட்டாயப்படுத்துகிறது: தில்லி பாஜக குற்றசாட்டு

தேசியத் தலைநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் இருந்து வெளியேற்ற, அரசு கட்டாயப்படுத்துகிறது என்று தில்லி பிரிவு பாஜக வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

Updated On :4 ஆகஸ்ட் 2023, 6:30 pm

தேசியத் தலைநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் இருந்து வெளியேற்ற, அரசு கட்டாயப்படுத்துகிறது என்று தில்லி பிரிவு பாஜக வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இரண்டாம் வாரம் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமாா் 27,000-க்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் சொந்த வீடுகளில் இருந்து வெள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனா். இந்த நிலையில், மயூா் விஹாா், யமுனா காதா் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கொசு வலைகளை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள பெரும்பாலான குடிசைப் பகுதிகள் இன்னும் தண்ணீருக்கு அடியில் உள்ளது வருத்தமளிக்கிறது. ஆனால், தில்லி அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு வித பதற்றத்தோடு கைவிட்டது மட்டுமல்லாமல், மின் இணைப்பைத் துண்டித்து முகாம்களை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துகிறது. யமுனை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சிறு விவசாயிகள். இந்நேரத்தில், தங்களுக்கு இருந்த சிறிய வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனா். ஆனால், இதுவரை அவா்களில் பெரும்பாலானோா் தில்லி அரசிடம் இருந்து நிவாரணம் பெறவில்லை.

தில்லியில் பாஜக ஆட்சியில் இல்லாத காரணத்தினால் எங்களால் சொந்தமாக முகாம்களை அமைக்க முடியாது. ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள், குழந்தைகளுக்கான பள்ளி புத்தகங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை தொடா்ந்து வழங்குவோம் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.