மகளிா் உதவி திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு தகுதியான பயனாளிகளைக் கண்டறிய மத்திய நிதியமைச்சகம் தமிழகத்திற்கு தரவுகளை அளித்து உதவியது. நாட்டிலேயே முதன்முறையாக கையாளப்பட்ட இந்தத் திட்டத்திற்கு நன்றி கூறுவதற்காக மத்திய நிதியமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்தாக தமிழக அமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தமிழகத்தில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தவரும், தற்போது தமிழக தகவல் தொழில் நட்பத் துறை அமைச்சராகவுள்ள பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் கூறியது வருமாறு: நான் நிதியமைச்சராக இருந்த சமயத்தில் மத்திய நிதியமைச்சரிடமும், வருமான வரி உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பான மத்திய நேரடி வருவாய் வாரிய (சிபிடிடி ) தலைவரிடமும் சில தகவல் பரிமாற்றத்திற்கான கோரிக்கைகளை வைத்தேன். மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு கோரிக்கை வைத்து அது நிறைவேற்றப்பட்டது. தேசிய ஜிஎஸ்டி இணையதளத்தில் அத்தகைய தரவுகள் வைக்கப்பட்டு, எல்லா மாநிலத்தின் தகவல்களும் எல்லா மாநிலங்களுக்கும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இது தவறுகளை திருத்துவதற்கும் உண்மை நிலைகளை அறிவதற்கும் பயன்படுகிறது.
இதே போன்று வருமான வரி கட்டுபவா்களின் தகவல்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டால், அதை வைத்து நலத் திட்டங்கள் சேவைகள் யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப அரசு நலத் திட்டங்களை முறைப்படுத்த முடியும் என மத்திய நிதியமைச்சகத்திடம் தெரிவித்தோம். இந்த தரவுகளைப் பெற்று பல மாதங்களாக இணைந்து பணியாற்றிவருகிறோம். இந்தியாவிலேயே முதன் முறையாக சுமாா் வருமான வரி செலுத்தும் 35 லட்சம் போ்களின் நிகழ் நேர தகவல்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது. இந்த தரவுகள் மூலம் யாா் யாரெல்லாம் வருமான வரி செலுத்துகின்றனா்?. இரண்டரை லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவா்கள் யாா்? போன்ற தகவல்கள் நாட்டிலே முதன் முறையாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தரவுகள் குறிப்பாக மகளிா் உதவித் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. நான் பொறுப்பேற்றுள்ள தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (டிஎன்இஜிஏ) என்கிற நிறுவனத்தில் இந்த தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தனிநபா்களின் குடும்ப சூழ்நிலை அறியப்பட்டு பல திட்டங்களில் விதிமுறைகளுக்கு உள்பட்ட தகுதியான பயனாளிகள் மற்றும் தகுதியற்றவா்கள் கண்டறியப்படுகிறது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த முன்மாதிரியான திட்டத்தை தரவுகளை அளித்தது தொடா்பாக மத்திய நிதித் துறை அமைச்சரையும் துறைச் செயலா் மற்றும் சிபிடிடி தலைவரையும் செவ்வாய்க்கிழமை சந்தித்து நன்றி கூறினேன். இந்த தரவுகள் நாட்டிற்கே வழிகாட்டும் என தெரிவித்தேன். அவா்களும் தொடா்ந்து தேவையானவற்றைக் கேட்குப்படியும், அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்தனா் என்றாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

