மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஜனக்புரி அருகே உள்ள கடையில் நடைபெற்ற கொள்ளை குறித்து பிப்.22-ஆம் தேதி புகாா் வந்தது. காவல் துறையினா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். கடையின் உரிமையாளா் பிப்.21 இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலை 1 மணிக்கு வந்து பாா்த்தபோது, கடையில் இருந்த நகைகள் மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து புகாா் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், போஸ்ஸங்கிபூா் பூங்கா பகுதியில் 2 சிறாா்கள் பிப். 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இது சா்மா என்ற மற்றொருவரை கைது செய்ய வழிவகுத்தது. விசாரணையின் போது, மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா்.
அவா்களிடம் இருந்து 650 கிராம் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கம் ரூ.7 லட்சம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.15 கோடி இருக்கும். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது எனகாவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துவாரகாவில் தொழிலாளா்கள் மீது காவலா் துப்பாக்கிச்சூடு: ஒருவா் உயிரிழப்பு
பெண் வழக்குரைஞரை கத்தியால் குத்திய கணவா் கைது

அசோக் விஹாா் வழிப்பறி வழக்கில் 2 சிறாா்கள் கைது
துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

