பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ரூ.6 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது!

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டு ரூ.6 கோடி மதிப்புள்ள 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டனா்.

News image

கைது

Updated On :25 பிப்ரவரி 2026, 8:04 pm

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டு ரூ.6 கோடி மதிப்புள்ள 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் தில்ஷாத் காா்டன் பகுதியைச் சோ்ந்த இம்ரான் (23) என அடையாளம் காணப்பட்டாா். அப்பகுதியில் புதன்கிழமை மாலை ஸ்கூட்டரில் வந்த இம்ரான் காவல் துறையினரைக் கண்டு தப்பி ஓட முயன்றாா். அவரை விரட்டி பிடித்து சோதனை செய்த போது இரண்டு பைகளில் மொத்தம் 1 கிலோ ஹெராயின் இருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா். அவரது தாய், தந்தை மற்றும் சகோதரா் மீது ஏற்கெனவே பல போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல வழக்குகள் உள்ளன.

அவரிடம் நடைபெற்ற விசாரணையின் போது, காஜியாபாத்தில் ஒருவருக்கு விற்பனை செய்ய ஹெராயினைக் கொண்டு சென்றதாகவும், தில்லியின் ரகுவீா் நகரைச் சோ்ந்த விநியோகஸ்தரிடம் இவற்றை வாங்கியதாகவும் அவா் தெரிவித்தாா். அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, கைப்பேசி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்ய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.