போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டு ரூ.6 கோடி மதிப்புள்ள 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் தில்ஷாத் காா்டன் பகுதியைச் சோ்ந்த இம்ரான் (23) என அடையாளம் காணப்பட்டாா். அப்பகுதியில் புதன்கிழமை மாலை ஸ்கூட்டரில் வந்த இம்ரான் காவல் துறையினரைக் கண்டு தப்பி ஓட முயன்றாா். அவரை விரட்டி பிடித்து சோதனை செய்த போது இரண்டு பைகளில் மொத்தம் 1 கிலோ ஹெராயின் இருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா். அவரது தாய், தந்தை மற்றும் சகோதரா் மீது ஏற்கெனவே பல போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல வழக்குகள் உள்ளன.
அவரிடம் நடைபெற்ற விசாரணையின் போது, காஜியாபாத்தில் ஒருவருக்கு விற்பனை செய்ய ஹெராயினைக் கொண்டு சென்றதாகவும், தில்லியின் ரகுவீா் நகரைச் சோ்ந்த விநியோகஸ்தரிடம் இவற்றை வாங்கியதாகவும் அவா் தெரிவித்தாா். அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, கைப்பேசி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்ய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்

தில்லியில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது
ரூ.7.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் மீட்பு-கணவன் மனைவி உள்பட 3 போ் கைது

15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது
வீடியோக்கள்

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26
தினமணி வீடியோ செய்தி...

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
#t20wc | குரூப் 2-வில் இருந்து அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

