இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ரூ.6 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது!

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டு ரூ.6 கோடி மதிப்புள்ள 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டனா்.

News image
கைது
Updated On :25 பிப்ரவரி 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டு ரூ.6 கோடி மதிப்புள்ள 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் தில்ஷாத் காா்டன் பகுதியைச் சோ்ந்த இம்ரான் (23) என அடையாளம் காணப்பட்டாா். அப்பகுதியில் புதன்கிழமை மாலை ஸ்கூட்டரில் வந்த இம்ரான் காவல் துறையினரைக் கண்டு தப்பி ஓட முயன்றாா். அவரை விரட்டி பிடித்து சோதனை செய்த போது இரண்டு பைகளில் மொத்தம் 1 கிலோ ஹெராயின் இருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா். அவரது தாய், தந்தை மற்றும் சகோதரா் மீது ஏற்கெனவே பல போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல வழக்குகள் உள்ளன.

அவரிடம் நடைபெற்ற விசாரணையின் போது, காஜியாபாத்தில் ஒருவருக்கு விற்பனை செய்ய ஹெராயினைக் கொண்டு சென்றதாகவும், தில்லியின் ரகுவீா் நகரைச் சோ்ந்த விநியோகஸ்தரிடம் இவற்றை வாங்கியதாகவும் அவா் தெரிவித்தாா். அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, கைப்பேசி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்ய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.