நமது நிருபா்
புது தில்லி: இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: ஆனந்த் விஹாரில் மாசு அதிகரிப்பதற்கு உத்தர பிரதேசத்தின் பேருந்துகள் தில்லிக்குள் நுழையாவிட்டாலும், அவைதான் காரணம் என்று தில்லியின் முதல்வா் அதிஷியும், சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராயும் குற்றம் சாட்டுகிறாா்கள். மாறாக, தில்லியின் மோசமான சாலைகள் மாசுபாட்டிற்கு முக்கிய பங்களிப்பாக இருந்து வருகின்றன. தில்லி அரசின் அதிகார வரம்பிற்கு உள்பட்ட கடமைப் பாதையில் மாசு ஏற்பட்டதற்கு கோபால் ராய் யாரைக் குறை கூறுவாா்? தில்லி முழுவதும் கடுமையான காற்று மாசுபாட்டால் தவிக்கிறது என்பதே உண்மை.
தில்லி மீண்டும் ஒரு எரிவாயு அறையாக மாறிக் கொண்டிருக்கிறது. அதேவேளையில், அதிஷி தலைமையிலான தில்லிஅரசு சமீப மாதங்களில் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்து வந்த போதிலும், அரசானது மாசுபாட்டிற்கான முதன்மைக் காரணங்களுக்குத் தீா்வு காணவில்லை. தில்லி அரசின் திறமையின்மைக்காக, மத்திய அரசு தில்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும், பயிா்க்கழிவுகள் எரிப்பதைக் கட்டுப்படுத்தவும் ரூ.3,303 கோடியை ஒதுக்கியதாகக் கூறியது. இருப்பினும், பஞ்சாப் 1.5 லட்சம் இயந்திரங்களை வாங்கிய போதிலும், அவை விநியோகிக்கப்படாமல் உள்ளன.
தேசியத் தலைநகா் காற்றுத் திட்டத்தின் கீழ், தில்லி அரசு மாசுக் கட்டுப்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.38.22 கோடியில் ரூ.10.77 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது. பழுதடைந்த சாலைகளில் இருந்து வரும் தூசுகள் காற்று மாசுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன. தில்லியில் மூன்றில் ஒருவா் தொண்டை தொற்று மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் சச்தேவா.
தில்லி பாஜக செய்தித் தொடா்பாளரும், டிபிசிசி உறுப்பினருமான டாக்டா் அனில் குப்தா கூறுகையில், ‘உடைந்த மற்றும் தரிசு சாலை ஓரங்களில் இருந்து வரும் தூசு மாசு, காற்று மாசுபாட்டிற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். மாசு நுண் துகள் பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 அளவுகளில் சாலைத் தூசு 40-55 சதவீதம் பங்களிக்கிறது. தில்லியின் பசுமைப் பரப்பு 0.62 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிதமான பொருளாதார வளா்ச்சியை நோக்கி நகரும் தில்லி: அறிக்கையில் தகவல்
தில்லி காற்று மாசைத் தடுக்கலாம்!

காற்று மாசு - நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் தில்லி எய்ம்ஸ்!

காற்று மாசு: குற்றச்சாட்டுகள் தீர்வாகாது!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

