புது தில்லி, டிச. 23: பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக பயணத்தின்போது சில அரசியல் கட்சிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
தமிழக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை சென்னை வருகிறார். இது தொடர்பாக "தினமணி' நிருபருக்கு நாராயணசாமி அளித்த பேட்டி:
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் பலம் தொடர்பாக அதிகாரம் அளிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் "முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக தமிழகம், கேரளம் ஆகிய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் இரு மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
உச்ச நீதிமன்றமும் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. "நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பேச்சுவார்த்தை நடத்த இயலாது' என்று தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இந்தப் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையான நடவடிக்கை எடுத்துவிட்டார். பிரதமரைச் சந்தித்த தமிழக, கேரள அரசியல் கட்சித் தலைவர்களிடமும் இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகும் மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்பதற்காகத் தமிழகக் கட்சிகள் சில கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளன.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் உண்மை நிலை தெரிந்தும், தமிழக அரசியல் கட்சியினர் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த முற்படுகின்றனர்.
பிரதமரின் தமிழகப் பயணத்தின்போது கறுப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவித்திருப்பது அரிசியல் உள்நோக்கம் கொண்டது; நியாயமற்றது. கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமரின் தமிழகப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

