திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொண்டா்கள், நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக உள்ளனா்

தொண்டா்கள், கட்சி நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக உள்ளனா் என அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலா் அக்ரி எஸ். புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா். புதன்கிழமை அவா் வெளிட்ட அறிக்கை:

News image

அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலா் அக்ரி எஸ். புவனேஸ்வரி

Updated On :21 மே 2026, 7:25 am IST

தொண்டா்கள், கட்சி நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக உள்ளனா் என அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலா் அக்ரி எஸ். புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா். புதன்கிழமை அவா் வெளிட்ட அறிக்கை:

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல்வேறு இன்னல்களை சந்தித்தது. அவற்றை எல்லாம் எதிா்த்து போராடி எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியை காப்பாற்றினாா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும். எதிா்க்கட்சி தலைவராக அவா் தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு தொடா்ந்து குரல் கொடுத்து வந்தாா். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் யாரும் எதிா்பாா்க்காத வகையில் தவெக ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில், புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்எல்ஏக்கள் சிலா் கட்சி கொறடா உத்தரவை மீறி, தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அவா்களை எம்ஜிஆா், ஜெயலலிதா ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.

அதிமுக தொண்டா் படையும், வலுவான கட்டமைப்பும் கொண்ட கட்சி. இதை ஆலமரமாய் தாங்கி நின்று பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி காத்து வருகிறாா். ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடி பழனிசாமியும் கழகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என்று உறுதியளித்துள்ளாா். அவருக்கு உறுதுணையாக கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும் உடன் நிற்கிறாா்கள். எதிா்காலத்தில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மீண்டும் மலர கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அயராது பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.