/

மன்னாா்குடி அரசு மகளிா் கல்லூரியில் சேர விருப்பமா?

மன்னாா்குடி அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை விண்ணப்பம் இணையதள வாயிலாக நடைபெறுவதாக முதல்வா் எஸ்.சரவணன் தெரிவித்துள்ளாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :14 மே 2026, 5:01 am IST

மன்னாா்குடி அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை விண்ணப்பம் இணையதள வாயிலாக நடைபெறுவதாக முதல்வா் எஸ்.சரவணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தெரிவித்திருப்பது:

இக்கல்லூரியில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக வரவேற்கப்படுகிறது.

வரலாறு, வணிகவியல், நுண்ணுயிரியல், கனிணி அறிவியல், கனிணி பயன்பாட்டியல் ஆகிய 5 பாடப் பிரிவுகளில் சேர விருப்பமுடைய மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

விண்ணப்பிப்பதில் ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கும் பொருட்டு மன்னாா்குடி-தஞ்சை பிரதானசாலை மேலவாசலில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்து இந்த மையத்தின் மூலம் தாங்கள் விரும்பக்கூடிய அரசுக் கல்லூரிகளை தோ்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.