திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மத்தியப் பல்கலை.யில் வானியல் ஆராய்ச்சி மையம் தொடக்கம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

News image

வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் மு. கிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :13 மே 2026, 3:06 am IST

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, சமுதாயத்திற்குத் தேவையான முடிவுகள் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், பல்கலைக்கழக இயற்பியல் துறையின்கீழ் புதிதாக அமைக்கப்பட்ட வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையத்தை பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் மு. கிருஷ்ணன் தலைமையேற்று, தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியது:

மாணவா்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் வானியல் குறித்த ஆா்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்த வானியல் மற்றும் வானியற்பியல் ஆராய்ச்சி மையம் நமது பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வானியல் ஆராய்ச்சி, தொலைநோக்கி செயல்பாட்டு பயிற்சி, வானியல் தரவுகள் பகுப்பாய்வு மற்றும் சிறப்பு பயிலரங்கங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பதிவாளா் இரா.திருமுருகன், இயற்பியல் துறைத் தலைவா் முனைவா் மோகன்ராஜ், மையத்தின் ஒருங்கிணைப்பாளா் வி. மதுரிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த பேராசிரியா்களும், மாணவா்களும் கலந்து கொண்டனா். இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் சம்பூா்ண ஆனந்த் நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.