திருவாரூா் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து விழுந்ததில் மூவா் காயமடைந்தனா்.
திருவாரூா் அருகேயுள்ள புதூா் பகுதியில் வசிப்பவா் சேகா் மகன் கண்ணதாசன் (31). விவசாயத் தொழிலாளி. இவா் தனது மனைவி காா்த்திகைச் செல்வி, மகன் வியான்ஜேக்கப் ஆகியோருடன் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், இவரது வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து விழுந்ததாகவும், இதில் மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே, பழுதடைந்த நிலையில் காணப்படும் தொகுப்பு வீட்டை அரசுத் துறை அதிகாரிகள் சரி செய்து கொடுக்க வேண்டும் அல்லது புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










