தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தெரு நாய்களை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியல்!

மன்னாா்குடி அருகே தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :22 மார்ச் 2026, 8:19 pm

மன்னாா்குடி அருகே தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

வேங்கைபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். அனைவரும் விவசாயம் சாா்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், மாடு, ஆடு மற்றும் கோழிகள் வளா்த்து வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் கடித்ததில், பாரதி என்பவரின் 2 ஆடுகள், சோபியா, ராஜேஸ்வரி ஆகியோரது தலா 1 ஆடு என 4 ஆடுகள் உயிரிழந்தன.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியினா் இறந்த ஆடுகளுடன், வேங்கைபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அங்குவந்த மன்னாா்குடி போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தி, இப்பிரச்னை குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், மன்னாா்குடி-திருவாரூா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.