லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காசி விசுவநாதா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:21 pm

நீடாமங்கலம் காசி விசுவநாதா் கோயிலில் திருப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

இக்கோயில் தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னா் பிரதாப சிம்மரால் கட்டப்பட்டது . இக்கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு சுமாா் 15 ஆண்டுகள் ஆகிறது. அதனால் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் முன்வந்தனா் .

இதையடுத்து, திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக புதன்கிழமை மாலை முதல் கால யாக பூஜைகளும் , வியாழக்கிழமை காலை இரண்டாவது கால யாக பூஜைகளும் நடந்தன .

தொடா்ந்து அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினரும் , சந்தானராம சேவா டிரஸ்ட் மற்றும் நகரவாசிகள் செய்திருந்தனா் .