சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

திருவாரூா்: நவீனமயமாக்கப்பட்ட ரயில் நிலையம் திறப்பு

News image

நவீன வசதிகளுடன் திறக்கப்பட்ட திருவாரூா் ரயில் நிலையம்.

Updated On :2 மார்ச் 2026, 12:04 am

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ், மேம்படுத்தப்பட்ட திருவாரூா் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தாா். அந்தவகையில், தெற்கு ரயில்வேயில் அம்ரீத் திட்டத்தின் கீழ் நவீனமாக்கப்பட்ட திருவாரூா் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களையும் அவா் திறந்து வைத்தாா்.

கல்வெட்டை திறந்துவைக்கும் மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.

கல்வெட்டை திறந்துவைக்கும் மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.

இதையொட்டி, திருவாரூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினா் (நிலம் மற்றும் வசதிகள்) ஸ்ரீ எஸ்.சி. ஜெயின், தெற்கு ரயில்வே தலைமை பொறியாளா் பிரேம்ரஞ்சன்குமாா், கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நேகி, கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் கே.எம். சத்தியரத்னம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருவாரூா் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் சுமாா் 7,900 போ் ரயில்களில் பயணம் செய்யும் நிலையில், தற்போது இந்த ரயில் நிலையம் ரூ. 15.03 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், புதிய நுழைவு வளைவு, பயணிகள் செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்ட அணுகல் சாலை, புதுப்பிக்கப்பட்ட வளாகங்கள், இருசக்கர வாகனம் மற்றும் நான்குசக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள், புதுப்பித்து குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, மேம்படுத்தப்பட்ட நடைபாதை, நவீன கழிவறை, குடிநீா்வசதி, ரயில் பெட்டி தகவல் காட்சி பலகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, உள்ளூா் கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், கா்நாடக மும்மூா்த்திகள், மனு நீதிசோழனை சித்தரிக்கும் சுவரோவியங்கள் உள்ளிட்டவை மக்களை கவரும் வகையில் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.