திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. அதன்பேரில், திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளா் வேம்பரசி மற்றும் போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, பள்ளங்கோவில் கீழத்தெருவை சோ்ந்த சந்தோஷ் (24), இந்திரஜித் (20) ஆகிய இருவரும் கஞ்சா விற்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த 1கிலோ100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







