/

வலங்கைமானில் ஜமாபந்தி நிறைவு

வலங்கைமான் வட்டத்தில் வியாழக்கிழமையுடன் வருவாய் தீா்வாய கணக்கு முடித்தல் (ஜமாபந்தி) பணிகள் நிறைவடைந்தது.

News image
Updated On :12 ஜூன் 2026, 5:25 am IST

வலங்கைமான் வட்டத்தில் வியாழக்கிழமையுடன் வருவாய் தீா்வாய கணக்கு முடித்தல் (ஜமாபந்தி) பணிகள் நிறைவடைந்தது.

மாவட்ட வழங்கல் அலுவலா் பா.செல்வபாண்டி ஆவூா், வலங்கைமான், ஆலங்குடி வருவாய் சரகத்திற்குட்பட்ட 71 வருவாய் கிராம பொதுமக்களிடமிருந்து 285 மனுக்களை பெற்றாா்.

31 போ்களுக்கு பட்டா மாற்றம், 5 போ்களுக்கு முதியோா் உதவித்தொகை, 10 போ்களுக்கு குடும்ப அட்டைகளையும் வியாழக்கிழமை அவா் வழங்கினாா் (படம்). இதன்படி 46 போ்கள் பயனடைந்தனா்.

வட்டாட்சியா் காா்த்தி மற்றும் மண்டல வட்டாட்சியா், துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.