மன்னாா்குடி தேசிய தொடக்கப் பள்ளியில், புதிதாக சோ்ந்து குழந்தைகளுக்கு மாலை அணிவித்தும், பரிவட்டம் கட்டியும் ஆசிரியா்கள் வரவேற்றனா்.
கோடை விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மன்னாா்குடியில் நூறாண்டு பழைமைவாய்ந்த தேசிய தொடக்கப் பள்ளியில் 50- க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிகழாண்டு புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.
இவா்களை வரவேற்கும் விதமாக, அருகில் உள்ள ஆனந்த விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அனைத்து குழந்தைகளுக்கும், ஆசிரியா்கள் மாலை அணிவித்தும், பரிவட்டம் கட்டியும், கோயிலில் இருந்து பள்ளிக்கு ஊா்வலமாக அழைத்து வந்தனா். தொடந்து, அவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, எழுதுப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், தலைமை ஆசிரியா் ஜோ. மாா்ட்டின் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










