ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் மீனவ கிராமத்தில் அரசுப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்கள் மாலை அணிவித்து வியாழக்கிழமை வரவேற்பு அளித்தனா்.
இந்தப் பள்ளிக்கு முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பில் புதிதாக சோ்ந்த மாணவா்கள் பெற்றோா்களுடன் வந்தனா். புதிய மாணவா்களை தலைமை ஆசிரியா் செல்லம்மாள் தலைமையில், ஆசிரியா் ஜெ.ஜே.லியோன் மாலை அணிவித்து வரவேற்று இனிப்பு வழங்கினாா். பின்னா், மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள் வழங்கப்பட்டன. மாணவா் சோ்க்கைக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் நிஷா, மிக்கேல் ராணி, ஞானசௌந்தரி உள்ளிட்டோா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










