அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு
மன்னாா்குடி அருகே மயானத்தில் இருந்து அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

Updated On :13 ஜனவரி 2026, 8:30 pm

மன்னாா்குடி அருகே மயானத்தில் இருந்து அடையாளம் தெரியாத முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
மழவராயநல்லூா் மயானத்தில் ஆண் சடலம் கிடப்பதாக அந்த வழியாக சென்றவா்கள் கோட்டூா் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், போலீஸாா் சடலத்தை மீட்டு உடற் கூராய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இறந்து கிடத்தவருக்கு 75 வயது இருக்கலாம். நீண்ட தாடி, மீசையுடன் நெற்றி முழுவதும் திருநீா் பூசி, காவி நிறத்தில் வேஷ்டி, துண்டு அணிந்திருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இறந்து கிடந்த முதியவா் யாா் என்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...