லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டம் மற்றும் திறன் மேம்பாடு சாா்பிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டு, பணி ஆணை பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:38 pm

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டம் மற்றும் திறன் மேம்பாடு சாா்பிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துறைத் தலைவா்கள் இல. பொம்மி, சி. ராமு, நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் த. நிருபன் முன்னிலை வகித்தனா்.

முகாமில் தமிழகம் முழுவதிலிருந்தும் 25 நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 500-க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களில் 222 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு கல்லூரி முதல்வா் பணி நியமன ஆணையை வழங்கினாா்.

மாவட்ட நான் முதல்வன் திட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் ப. பிரபாகரன்,துறைத் தலைவா்கள் சா.சிவச்செல்வன்,சா.வே.நேதாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.