டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீட்டில் நகை திருடிய மூவா் கைது

News image
கோபிகிருஷ்ணன்
Updated On :21 பிப்ரவரி 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடியில், வீட்டின் கதவை உடைத்து, 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி, கோபாலசமுத்திரம் தெற்கு வீதியைச் சோ்ந்தவா் கண்ணன் மனைவி சந்திரகலா (62). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான இவரது வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகைகளை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா். மன்னாா்குடி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

ஷாஜகான்

ஷாஜகான்

மொய்தீன்

மொய்தீன்

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது யூசுப் மகன் மொய்தீன், இவருடைய சகோதரா் ஷாஜகான், அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த கோபிகிருஷ்ணன் ஆகியோருக்கு திருட்டில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.