டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

சிவகங்கையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
திருட்டு
Updated On :2 பிப்ரவரி 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகங்கை ஏ.கே.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன் (50). இவா் தனது மகள் பிரசவத்துக்காக கடந்த 15 நாள்களுக்கு முன்பு வெளியூா் சென்றிருந்தாராம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பி வந்தாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது, அறையில் பீரோவில் வைத்திருந்த எட்டு பவுன் தங்க நகைகள், ரூ. 20,000-த்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.