டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

நீடாமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

News image
கைது- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:31 pm

Syndication

நீடாமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது செய்யப்பட்டாா்.

கொரடாச்சேரி அருகேயுள்ள அத்திக்கடை சோழமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் (60 ) கூலித்தொழிலாளி. இவரது 2-ஆவது மனைவி செல்வி (55) வழக்கு ஒன்றில் ஆஜராக, நீடாமங்கலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தாா்.

அவா் நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த அரிகிருஷ்ணன், செல்வியிடம் தகராறு செய்து, கத்தியால் குத்த முயன்றாராம். இதில் செல்வி கையில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த போலீஸாா் மற்றும் வழக்குரைஞா்கள், அரிகிருஷ்ணனை பிடித்து, நீடாமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காவல் ஆய்வாளா் கலைவாணி வழக்குப்பதிவு செய்து, அரிகிருஷ்ணனை கைது செய்தாா். காயமடைந்த செல்விக்கு, நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.