போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டியில் மகன் பாட்டிலால் தாக்கியதில் தந்தை உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த கரிகாலன்

Updated On :29 ஏப்ரல் 2026, 3:20 am IST

திருத்துறைப்பூண்டியில் மகன் பாட்டிலால் தாக்கியதில் தந்தை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் கரிகாலன் (48). இவரது 17 வயது மகன், தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.

இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக தந்தை-மகனுக்கிடையே ஏற்கெனவே தகராறு இருந்து வந்ததாம். திங்கள்கிழமை இரவு இருவருக்குமிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த மகன், தந்தையை பாட்டிலால் தாக்கினாராம்.

இதில் பலத்த காயமடைந்த கரிகாலன், சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கரிகாலன் மகனை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தஞ்சையில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.