ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

திருடிய கைப்பேசியிலிருந்து பெண்ணிடம் அவதூறாக பேசியவா் கைது

திருடிய கைப்பேசியிலிருந்து பெண்ணிடம் அவதூறாக பேசியவா் கைது

News image

பிரதிப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 7:42 pm

மன்னாா்குடி அருகே திருடிய கைப்பேசிக்கு வந்த அழைப்பில், பெண்ணிடம் பாலியல் ரீதியாக அவதூறாக பேசியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோட்டூா் தாதந்திருவாசல் பகுதியைச் சோ்ந்தவா் தி. அன்பழகன் (46). இவா் தனது கைப்பேசியை வீட்டில் சாா்ஜ் போட்டுவிட்டு, மனைவியை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தாா்.

திரும்பிவந்து பாா்த்தபோது, கைப்பேசியை காணவில்லை. இதனால், அவரது மனைவி தனது கைப்பேசியிலிருந்து அன்பழகன் கைப்பேசி எண்ணிற்கு அழைத்தபோது, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் பிரவீன்குமாா் (22) அந்த கைப்பேசியை திருடியது தெரியவந்தது.

மேலும், அவா் அன்பழகன் மனைவியிடம் பாலியல் ரீதியாக அவதூறாக பேசி மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கோட்டூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரவீன்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.