தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது

மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 8:37 pm

திருப்பூா்: மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா், பழனிச்சாமி நகரைச் சோ்ந்தவா் சரவணன் (35). போயம்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை முன்பு ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த இவரது மோட்டாா் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில் அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அதனடிப்படையில் பெருமாநல்லூரைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் சரவணனுக்கு சொந்தமான மோட்டாா் சைக்கிளை திருடியதை ரமேஷ்குமாா் ஒப்புக் கொண்டாா். மேலும், திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் 3 மோட்டாா் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து ரமேஷ்குமாரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.