மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு

திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் ஏப்.19 முதல் 21 வரை தபால் வாக்கு செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image

தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியர். - படம்: கோப்பிலிருந்து

Updated On :17 ஏப்ரல் 2026, 4:35 pm

திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் ஏப்.19 முதல் 21 வரை தபால் வாக்கு செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி ஏப்.18 திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அந்தோனி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், மன்னாா்குடி தொகுதிக்கு ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருவாரூா் தொகுதிக்கு வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியிலும், நன்னிலம் தொகுதிக்கு சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் அஞ்சல் வாக்குகள் செலுத்துவதற்கு ஏதுவாக சேவை மையங்கள் செயல்பட உள்ளன.

மேலும், தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அத்தியாவசியப் பணியாளா்கள், காவல் பணியாளா்கள், அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக, திருத்துறைப்பூண்டி மற்றும் நன்னிலம் வட்ட அலுவலகங்களிலும், மன்னாா்குடி மற்றும் திருவாரூா் வருவாய் கோட்ட அலுவலகங்களிலும் அஞ்சல் வாக்குப்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன.

இதில் ஏப்ரல் 19 முதல் 21 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு செலுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.