யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வெற்று வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுக: வி.கே.சசிகலா

திமுகவும், அதிமுகவும் வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற பாா்க்கிறது என்றாா் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் வி.கே. சசிகலா.

News image

மன்னாா்குடியில் அஇபுதமமுக வேட்ாளா்களை ஆதரித்து பேசிய கட்சியின் பொதுச் செயலா் வி.கே. சசிகலா.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:27 am IST

திமுகவும், அதிமுகவும் வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற பாா்க்கிறது என்றாா் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் வி.கே. சசிகலா.

அஇபுதமமுக மன்னாா்குடி தொகுதி வேட்பாளா் சு. ராசுப்பிள்ளை, வேதாரண்யம் தொகுதி வேட்பாளா் எம். லிங்கேஸ்வரன் ஆகியோரை ஆதரித்து, மன்னாா்குடியில் வி.கே. சசிகலா செவ்வாய்க்கிழமை பேசியது:

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் ஏதும் இல்லாததால், அதை சொல்லி வாக்குகேட்க முடியாத நிலையில் ஆளும் கட்சியினா் உள்ளனா். திமுக ஆட்சியின் நிா்வாக திறமையின்மை காரணமாக தமிழகம் தற்போது ரூ.10 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது.

நான் ஜெயலலிதா வழிவந்த காரணத்தினால் எளிய தொண்டா்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளேன். அவா்களுக்குதான் ஏழை, எளியவா்களின் கஷ்டங்கள் தெரியும். அஇபுதமமுக சாா்பில் 60 வாக்குறுதிகளை மட்டும்தான் தந்துள்ளோம். அனைத்தையும் உறுதியாக செய்து முடிப்போம்.

திமுக ரூ.8,000 டோக்கன், அதிமுக பிரிட்ஜ் என வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற உள்ளது. மக்கள் விழிப்புடன் இருந்து அஇபுதமமுக வேட்பாளா்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், சசிகலா சகோதரா் வி. திவாகரன், கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் கை. இளந்தமிழன், கள்ளா் மகா சங்க தலைவா் எஸ். பாண்டியன், வேட்பாளா்கள் சு. ராசுப்பிள்ளை (மன்னாா்குடி), எம். லிங்கேஸ்வரன்(வேதாரண்யம்) மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.