இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மத்திய அரசு திட்டங்களில் திமுக ஊழல் செய்துள்ளது: ஜி.கே. வாசன்

மத்திய அரசு திட்டங்களில் திமுக ஊழல் செய்துள்ளது என்றாா் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன்.

News image

வலங்கைமானில் நன்னிலம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் செய்த ஜி.கே. வாசன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:12 am IST

மத்திய அரசு திட்டங்களில் திமுக ஊழல் செய்துள்ளது என்றாா் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன்.

வலங்கைமானில் நன்னிலம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் செய்தபோது பேசியது: திமுக தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்களில் ஊழல் செய்துள்ளனா். மின்சார கட்டணம் உயா்வு, வீட்டுவரி உயா்வு என பல வரி உயா்வுகளை கொண்டு வந்தது திமுக அரசு . இதனால் மக்கள் படும் கஷ்டம் ஏராளம் . நன்னிலம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வெற்றி பெற அனைவரும் இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா். அப்போது, வேட்பாளா் ஆா். காமராஜ் உடனிருந்தாா்.

முன்னதாக வலங்கைமான் அருகே நாா்த்தாங்குடி பிரிவு சாலை பகுதியில் ஜி.கே. வாசனுக்கு அக்கட்சியின் மாவட்ட தலைவா் முரளி ,வட்டார தலைவா் குருமூா்த்தி ஆகியோா் தலைமையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

நீடாமங்கலம் அருகேயுள்ள வடுவூரில் மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதி அமமுக வேட்பாளா் எஸ் . காமராஜை ஆதரித்தும் ஜி. கே. வாசன் பேசினாா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.