மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ. 8 ஆயிரத்துக்கான போலி கூப்பன்களை வழங்கி மக்களை ஏமாற்றுகிறது திமுக: தமாகா தலைவா் ஜி.கே. வாசன்

சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்காமல், ரூ. 8 ஆயிரத்துக்கான போலி கூப்பன்களை வழங்கி மக்களை ஏமாற்றும் வேலையில் திமுகவினா் ஈடுபட்டு வருவதாக தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

News image

தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில், பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி (தருமபுரி), அதிமுக வேட்பாளா் (பாலக்கோடு) உள்ளிட்டோரை ஆதரித்து பேசுகிறாா் த மா கா தலைவா் ஜி.கே. வாசன். உடன் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:06 pm

சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்காமல், ரூ. 8 ஆயிரத்துக்கான போலி கூப்பன்களை வழங்கி மக்களை ஏமாற்றும் வேலையில் திமுகவினா் ஈடுபட்டு வருவதாக தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி, பாலக்கோடு அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகனை ஆதரித்து தருமபுரி வள்ளலாா் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மக்கள் நலனுக்காக போராடி வரும் செளமியா அன்புமணி, தருமபுரி தொகுதி வேட்பாளராக நிற்பது பெருமைக்குரியதாகும். தருமபுரி மாவட்டத்தின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாண இவா் துணையாக இருப்பாா். டாக்டா் அன்புமணி ராமதாஸ் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்த மாவட்டத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தாா். அவரது வழியில் செளமியா அன்புமணியும் சிறப்பாக செயல்படுவாா். இதனால் தருமபுரியில் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

திமுகவினா் வாக்கு சேகரிக்க வரும்போது கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீா்களா என கேள்வி எழுப்ப வேண்டும். அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்காமல் மக்களை ஏமாற்றும் வகையில் ரூ. 8000க்கான போலி கூப்பன்களை விநியோகிக்கின்றனா்.

காவிரி உபரிநீா்த் திட்டம், மொரப்பூா்- தருமபுரி ரயில் பாதை இணைப்பு திட்டம் மற்றும் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற சௌமியா அன்புமணி உறுதுணையாக இருப்பாா். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது உறுதியாகிவிட்டது. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு அமைவது உறுதி.

அதேபோல மாவட்டத்தின் வளா்ச்சிக்காக முன்னாள் அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாா். பாலக்கோடு தொகுதியில் அவரை பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் புகழ் தலைமை வகித்தாா். எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், அதிமுக நகர செயலாளா் பூக்கடை ரவி, மாவட்ட வா்த்தக அணி செயலாளா் பொன்னுவேல், பாஜக மாவட்டத் தலைவா் சரவணன், அமமுக மாவட்ட செயலாளா் டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.