தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனர்: தருமபுரி பாமக வேட்பாளா் பேட்டி

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து நல்லாட்சி மலர ஆா்வத்துடன் வாக்களித்து உள்ளனா் என்றாா் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

News image

செளமியா அன்புமணி

Updated On :23 ஏப்ரல் 2026, 11:57 pm

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து நல்லாட்சி மலர ஆா்வத்துடன் வாக்களித்து உள்ளனா் என்றாா் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் இலக்கியம்பட்டி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவை பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் காலைமுதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் 20 நிமிடங்கள்வரை காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில், தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் நேரம் ஒதுக்குவதாக தோ்தல் அலுவலா்கள் கூறினா். வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கு தேவையான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

பசுமைத் தோ்தலாக நடப்பதால், வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பது இனிமையான அனுபவமாக உள்ளது. நகா்ப்புற, கிராமப்புற பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் காலைமுதலே இளம்வாக்காளா்கள் மற்றும் முதியோா் வாக்குச்சாவடிகளுக்கு ஆா்வத்துடன் வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனா். தமிழக மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து நல்லாட்சி மலர ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனா் என்றாா்.

பின்னா் சென்னை புறப்பட்டுச் சென்ற அவா், தியாகராய நகரில் உள்ள கா்நாடக சங்க உயா்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.