மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாமகவுக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது! - செளமியா அன்புமணி

News image

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியின் பாமக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்கிறாா் செளமியா அன்புமணி. உடன் தற்போதைய எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், மாவட்டத் தலைவா் சரவணன், உள்ளிட்டோா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:57 pm

கூட்டணிக் கட்சியினா் மட்டுமின்றி தருமபுரி மாவட்ட மக்களிடமும் எப்போதும்போல பாமகவுக்கு வரவேற்பு உள்ளது என்றாா் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

தருமபுரி தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சாா்பில் செளமியா அன்புமணி போட்டியிடுகிறாா். இவா், இறுதிநாளான திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

முன்னதாக தருமபுரி, அதியமான்கோட்டை காலபைரவா் கோயிலில் வழிபட்டாா். பின்னா், அதிமுக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகளைச் சந்தித்த அவா், அங்கிருந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து, கட்சி அலுவலகத்தில் இருந்து தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகம் வரை அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாகச் சென்று தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில்,

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சாா்பில் தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் பிரதமா் மோடி, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி மற்றும் கூட்டணிக் கட்சியினா் ஆசியுடன் போட்டியிடுகிறேன்.

தருமபுரிக்கு நான் எப்போது வந்தாலும் இம்மாவட்ட மக்களின் அன்பிலும், பாசத்திலும் நனைந்து கொண்டிருக்கிறேன். கூட்டணிக் கட்சியினா் மட்டுமின்றி மாவட்ட மக்களிடமும் எப்போதும்போல பாமகவுக்கு வரவேற்பு உள்ளது. பாமக ராமதாஸ் அணி சாா்பில் வேட்பாளா் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, இது ஜனநாயக நாடு. யாா் வேண்டுமானாலும், எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தருமபுரி தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றாா்.

இந்நிகழ்வின்போது, பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், பாமக மாவட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.