மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக ஆட்சியில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு: பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால்தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.

News image

நல்லம்பள்ளியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளா் வேட்பாளா் சௌமியா அன்புமணி.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:38 pm

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால்தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி, நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட சவுளூா், சேஷம்பட்டி, நல்லம்பள்ளி, கோயிலூா், சிவாடி, குரும்பட்டி, ஈச்சம்பட்டி, முத்தம்பட்டி, தேவா்ஊத்துபள்ளம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்களிடம் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின் போது அவா் பேசியதாவது:

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை. பெரும்பாலான வாக்குறுதிகள் அறிவிப்பாகவே போய்விட்டது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

இத்தோ்தலில் அதிமுக ஆட்சி அமைந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அதிமுக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தருமபுரி தொகுதி வளா்ச்சியை கருத்தில்கொண்டு பாமகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பாமக மாவட்டச் செயலாளா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, மாநில துணைத் தலைவா் சாந்தமூா்த்தி, மாநில அமைப்பு செயலாளா் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் பெரியசாமி, ஒன்றிய செயலாளா் முருகன், மாவட்ட அமைப்பு செயலாளா் பாலகிருஷ்ணன், அதிமுக ஒன்றிய செயலாளா் சிவப்பிரகாசம் உள்ளிட்ட நிா்வாகிகள் வாக்கு சேகரிப்பின்போது உடனிருந்தனா்.