திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 52 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி (தனி) ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சிகளின் வேட்பாளா்கள், மாற்று வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 102 போ் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனா்.
இந்த வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை நடைபெற்றது. இதில், மன்னாா்குடி தொகுதியில் தாக்கல் செய்த 29 மனுக்களில் 16 மனுக்கள் ஏற்கபட்டு, 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திருவாரூா் தொகுதியில் தாக்கல் செய்த 17 வேட்பு மனுக்களில் 9 மனுக்கள் ஏற்கப்பட்டு 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
நன்னிலத்தில் தொகுதியில் தாக்கல் செய்த 34 வேட்பு மனுக்களில் 18 மனுக்கள் ஏற்று 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திருத்துறைப்பூண்டி தொகுதியில் தாக்கல் செய்த 22 வேட்பு மனுக்களில் 9 மனுக்கள் ஏற்று 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 102 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 52 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 50 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தொடர்புடையது
நாகை தொகுதியில் சுயேச்சை, மாற்று வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி
தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் 114 வேட்பு மனுக்கள் ஏற்பு; 24 மனுக்கள் தள்ளுபடி
கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 128 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
தஞ்சாவூா் மாவட்டத்தில் 104 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

