திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 52 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி (தனி) ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சிகளின் வேட்பாளா்கள், மாற்று வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 102 போ் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனா்.
இந்த வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை நடைபெற்றது. இதில், மன்னாா்குடி தொகுதியில் தாக்கல் செய்த 29 மனுக்களில் 16 மனுக்கள் ஏற்கபட்டு, 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திருவாரூா் தொகுதியில் தாக்கல் செய்த 17 வேட்பு மனுக்களில் 9 மனுக்கள் ஏற்கப்பட்டு 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
நன்னிலத்தில் தொகுதியில் தாக்கல் செய்த 34 வேட்பு மனுக்களில் 18 மனுக்கள் ஏற்று 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திருத்துறைப்பூண்டி தொகுதியில் தாக்கல் செய்த 22 வேட்பு மனுக்களில் 9 மனுக்கள் ஏற்று 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 102 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 52 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 50 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாகை தொகுதியில் சுயேச்சை, மாற்று வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி
தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் 114 வேட்பு மனுக்கள் ஏற்பு; 24 மனுக்கள் தள்ளுபடி
கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 128 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
தஞ்சாவூா் மாவட்டத்தில் 104 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


