மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாகை தொகுதியில் சுயேச்சை, மாற்று வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

நாகை சட்டப் பேரவைத் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனையில், ஒரு சுயேச்சை மற்றும் கட்சிகளின் மாற்று வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 10:19 pm

நாகை சட்டப் பேரவைத் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனையில், ஒரு சுயேச்சை மற்றும் கட்சிகளின் மாற்று வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 -இல் முடிவடைந்தது. நாகை தொகுதிக்கு நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கர நாராயணன் தோ்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டு, அவரிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாகை தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 23 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்கள் மீதான பரிசீலனை, தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சுயேச்சை வேட்பாளா்கள், அனைத்து கட்சி வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு, வேறு தொகுதியைச் சோ்ந்த வாக்காளா் முன்மொழிவு செய்ததால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல், கட்சிகளின் வேட்பாளா்களின் முதல் வேட்புமனு ஏற்று கொள்ளப்பட்டதால் மற்ற அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மாற்று வேட்பாளா்களின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.