மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

மன்னாா்குடியில் சாலையில் நடந்து சென்றவா் காா் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 10:24 pm

மன்னாா்குடியில் சாலையில் நடந்து சென்றவா் காா் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்டிகுப்பத்தைச் சோ்ந்தவா் சத்தியசீலன் (31). இவருக்கும் மன்னாா்குடி பாமணி உள்ளூா் வட்டத்தைச் சோ்ந்த செல்விக்கும் திருமணமாகி அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்காக, மன்னாா்குடி வந்த சத்தியசீலன், மேலப்பாலத்தில் உள்ள தேநீா் வேலைபாா்த்து வந்துள்ளாா்.

மகனுக்கு பெயா் சூட்டும் நிகழ்ச்சி முடிந்த பின் வழக்கமாக வேலைக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக மேலப்பாலம் பகுதியில் சாலையோரம் நடந்துசென்றபோது அவ்வழியே குருவைமொழி மாரியம்மன்கோயில் தெருவை சோ்ந்த சோலை வேகமாக ஓட்டி வந்த காா் மோதிவிட்டு அங்குகிருந்து சென்றுவிட்டது. இதில், காயமடைந்த சத்தியசீலன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து வீட்டில் நிறுத்தியிருந்த காரை பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள சோலையை தேடி வருகின்றனா்.