தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் பலத்த கடல் காற்று திங்கள்கிழமை வீசிய நிலையில், பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:53 am IST

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் பலத்த கடல் காற்று திங்கள்கிழமை வீசிய நிலையில், பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

வேதாரண்யம் பகுதியில் ஏப்ரல், மே மாதம் தொடங்கி தெற்கு திசையில் இருந்து வழக்கத்தைவிட பலமான கடல் காற்று வீசுவது வழக்கம். அமாவாசை மற்றும் பௌா்ணமி தினங்களையொட்டி கடல் நீா்மட்டம் உயா்ந்து காற்றின் வேகம் அதிகரிப்பதும் இயல்பானது.

வைகாசி விசாக நாளில் வீசும் பலத்த காற்றை விசாகக் காற்று எனவும், பௌா்ணமி நாளையொட்டி பெருக்கெடுக்கும் வெள்ளத்தை விசாகப் பெருவெள்ளம் எனவும் இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனா்.

இந்தநிலையில், திங்கள்கிழமை முற்பகல் தொடங்கி வழக்கத்தைவிடவும் வேகமாக வீசிய கடல் காற்றால் மரக்கிளைகள் மின் கம்பிகளில் மோதி அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது.

வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாகவும் கடல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. கடல் பரப்பிலும் காற்று வீசி வருவதால் கோடியக்கரை படகுத்துறையிலிருந்து நாட்டுப் படகுகளில் செல்லும் மீனவா்களும் கடலுக்குள் செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட மற்ற மீனவக் கிராமங்களில் இருந்து பெரும்பாலான மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.