நாகை மாவட்டத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 5 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் விஜய் பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தாா். இதன்படி, தமிழகம் முழுவதும் 717 மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 5 மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் நாகை புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள மதுக்கடை, வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடை, வேதாரண்யம் பகுதியில் 3 மதுக்கடைகள் உள்பட 5 கடைகளை மூட டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. மூடப்படும் கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள், வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியமா்த்தப்படுவா் என்று டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் 5 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 மதுக்கடைகளை மூட முடிவு

நாளை மதுக்கடைகளை மூட ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



