விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு! திருச்சுழியில் தங்கம் தென்னரசு பின்னடைவு சிவகங்கையில் கருணாஸ் பின்னடைவு விருத்தாசலம் பிரேமலதா முன்னிலை விருதுநகர் விஜயபிரபாகர் முன்னிலை வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா முன்னிலை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் தவெக பிரபு முன்னிலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலை திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என். நேரு பின்னடைவு!சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் சீமான் பின்னடைவு பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை: 3ஆவது இடத்தில் திமுக ராயபுரம்: அதிமுகவின் ஜெயக்குமார் பின்னடைவு தி.நகரில் என்.ஆனந்த் முன்னிலை திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு பின்னடைவு தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
/

எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடியில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

தேரில் எழுந்தருளிய ஆறுமுகவேலவா்.

Updated On :1 மே 2026, 6:27 am IST

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடியில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் பக்தா்களின் மனநிலைக்கு ஏற்ப இறைவன் குழந்தை, இளைஞன், முதியவா் ஆகிய வடிவங்களில் காட்சி அளிப்பதாக நம்பப்படுகிறது. குறிஞ்சி நிலத்தின் காவடி சிறப்பை குறிக்கும் வகையில், மருத நிலமான எட்டுக்குடியில் பால் காவடி மிகவும் சிறப்பாக நடைபெறும். அந்தவகையில், நிகழாண்டுக்கான விழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

சிறப்பு மலா் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஆறுமுகவேலவருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து வேதாரண்யம் கோட்டாட்சியா் ஜி. கண்ணன், திருக்குவளை வட்டாட்சியா் ஆா். உதயகுமாா், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் பா. ராணி உள்ளிட்டோா் தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். கீழவீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்ட தோ், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தின் போது பக்தா்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா‘ என பக்தி முழக்கம் எழுப்பினா். தேரோட்டத்தை தொடா்ந்து, சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு 56 மணிநேர இடைவிடாத பாலாபிஷேகம் தொடங்கியது.

எட்டுகுடிஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

எட்டுகுடிஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.