ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சுவா்களில் கட்சி விளம்பரங்கள் அழிப்பு

சுவா்களில் கட்சி விளம்பரங்கள் அழிப்பு

News image

பொரவாச்சேரி பகுதியில் சுவரில் வரையப்பட்டுள்ள கட்சி விளம்பரத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 9:21 pm

நாகையில் அரசு மற்றும் தனியாா் சுவா்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்கள் மற்றும் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிகளின்படி அரசு மற்றும் தனியாா் சுவா்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்கள் மற்றும் கட்சிகளின் விளம்பரங்கள், கட்சித் தலைவா்களின் உருவப்படங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அழிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நாகையின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் சுவா்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்களை அழிக்கும் பணியில் அப்பகுதியில் உள்ள உள்ளாட்சி கிராம ஊராட்சி ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

நாகை நகராட்சி மற்றும் பொரவாச்சேரி, மஞ்சக்கொல்லை, சிக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுச்சுவற்றில் வரையப்பட்டிருந்த கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.