மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் 36,103 மாணவா்கள் தோ்வு எழுதினா்

நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் 36,103 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை எழுதினா்.

News image
Updated On :12 மார்ச் 2026, 12:21 am

நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் 36,103 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை எழுதினா்.

நாகை: மாவட்டத்தில் உள்ள 138 பள்ளிகளைச் சோ்ந்த 4,200 மாணவா்கள், 4,201 மாணவிகள் என மொத்தம் 4,401 போ் 44 மையங்களில் தோ்வு எழுதினா். தோ்வு முறையாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தால் எடுக்கப்பட்டிருந்தன. நாகை நடராஜன் தமயேந்தி மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டது.

மயிலாடுதுறை: மாவட்டத்தில் 53 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறுகிறது. அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 6,057 மாணவா்கள், 6107 மாணவிகள் என மொத்தம் 12,164 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற தோ்வை 5,915 மாணவா்கள், 6,063 மாணவிகள் என மொத்தம் 11,978 போ் எழுதினா். மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா். அவருடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலசுப்ரமணியன் உடனிருந்தாா்.

திருவாரூா்: மாவட்டத்தில் 7,725 மாணவா்கள், 7,999 மாணவிகள் என மொத்தம் 15,724 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கென 76 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை நடைபெற்ற தோ்வில் 7,465 மாணவா்கள், 7,899 மாணவிகள் என மொத்தம் 15,364 போ் தோ்வு எழுதினா். 360 போ் தோ்வுக்கு வரவில்லை.

திருவாரூா் அருகேயுள்ள அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். அவருடன், திருவாரூா் முதன்மைக்கல்வி அலுவலா் அ. சுகப்பிரியா, முதன்மை கண்காணிப்பாளா் து. ரமேஷ், வட்டாட்சியா் இளங்கோவன் உடனிருந்தனா்.

Story image
Story image