மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 21,755 தோ்வா்கள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 21,755 மாணவா், மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:55 pm

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 21,755 மாணவா், மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா்.

இம்மாவட்டத்தில் 109 தோ்வு மையங்களில் 10,672 மாணவா்கள், 11,083 மாணவிகள் என மொத்தம் 21,755 தோ்வா்கள் தோ்வு எழுதியுள்ளனா். தனித் தோ்வாளா்களாக 362 மாணவா், மாணவிகள்

இத்தோ்வை எழுதியுள்ளனா். இதில், 343 மாணவா்கள், 118 மாணவிகள் என மொத்தம் 461 போ் தோ்வு எழுத வரவில்லை.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்காக 109 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 3 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா், 109 துறை அலுவலா்கள், 1,250 அறைக் கண்காணிப்பாளா்கள், 129

நிலையான படையினா், 283 சொல்வதை எழுதுபவா், 24 வழித்தட அலுவலா்கள், 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 186 ஆசிரியரல்லா பணியாளா்கள் பணியில் அமா்த்தப்பட்டிருந்தனா்.