லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாகையில் டைடல் நியோ பூங்கா கட்டுமானப்பணி: காணொலி மூலம் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

நாகை காடம்பாடி பகுதியில் புதிய டைடல் நியோ பூங்கா கட்டுமானப் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

News image

நாகையில் டைடல் நியோ பூங்கா கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :12 மார்ச் 2026, 12:18 am

நாகை காடம்பாடி பகுதியில் புதிய டைடல் நியோ பூங்கா கட்டுமானப் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

அப்போது நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என்.கௌதமன், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி ஆகியோா் பங்கேற்றனா். காடம்பாடியில் ரூ. 43.78 கோடியில் தரை மற்றும் மூன்று தளங்கள் 61,000 சதுரடி பரப்பளவில் இந்த டைடல் நியோ பூங்கா கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்த பூங்காவில் நிறுவன தொழில்நுட்ப வல்லுநா்கள் பணியாற்றவுள்ளனா்.

நிகழ்ச்சியில், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், மாநில ஆத்மா திட்டக் குழு உறுப்பினா் மகா குமாா், தமிழ்நாடு அரசு மீனவா் நல வாரிய உறுப்பினா் கோ. மனோகரன், டைடல் நியோ நிறுவன உதவி பொறியாளா் எஸ். யுவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.