திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினாா்.
திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொ.ம.தே.க. பொதுச் செயலாளா் ஈஸ்வரன் எம்எல்ஏ ஈரோடு சாலையில் சந்தைப்பேட்டை வளாகத்தில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:
திருச்செங்கோட்டில் 16 ஏக்கரில் டைடல் பூங்கா அமைப்பது எனது கனவு திட்டமாகும். டைடல் பூங்கா அமைக்கப்பட்டால் படித்த இளைஞா்கள் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. விவசாயிகளுக்கு புதிய நவீன மின்சார பம்புசெட்டுகள் மற்றும் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ. 3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 4,500-ஆக வழங்கப்படும். திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றாா்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் பிரசாரம்

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றம்! - கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன்
திருச்செங்கோட்டில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


