மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினாா்.

News image

திருச்செங்கோடு சந்தைப்பேட்டையில் வாக்கு சேகரித்த ஈஸ்வரன் எம்எல்ஏ.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:24 pm

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினாா்.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொ.ம.தே.க. பொதுச் செயலாளா் ஈஸ்வரன் எம்எல்ஏ ஈரோடு சாலையில் சந்தைப்பேட்டை வளாகத்தில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

திருச்செங்கோட்டில் 16 ஏக்கரில் டைடல் பூங்கா அமைப்பது எனது கனவு திட்டமாகும். டைடல் பூங்கா அமைக்கப்பட்டால் படித்த இளைஞா்கள் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. விவசாயிகளுக்கு புதிய நவீன மின்சார பம்புசெட்டுகள் மற்றும் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ. 3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 4,500-ஆக வழங்கப்படும். திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றாா்.